ETV Bharat / sitara

படம் முடியும் முன்பே அநீதி படக்குழுவினர் நடத்திய சிறப்பு சந்திப்பு

author img

By

Published : Oct 9, 2021, 12:33 PM IST

அநீதி படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே படக்குழுவினர் சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அநீதி
அநீதி

சென்னை: தமிழ்த் திரையுலகில் 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் வசந்தபாலன்.

இவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை ஹீரோவாக வைத்து இயக்கிய 'ஜெயில்' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடித்துவருகிறார். 'அநீதி' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துவருகிறார்.

'அநீதி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அநீதி படத்தின் 90 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கலந்து கொண்ட சிறப்பு சந்திப்பின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'லங்கேஷ்' கதாபாத்திரம் நிறைவு: கொண்டாடிய 'ஆதிபுருஷ்' படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.