ETV Bharat / sitara

த்ரில்லர் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

author img

By

Published : Oct 3, 2021, 12:01 AM IST

ஐஸ்வர்யா தனுஷ்
ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். 'வை ராஜா வை' படத்திற்குப் பிறகு எந்தவொரு படமும் இயக்காமலிருந்த இவர், பல்வேறு கதைகள் மட்டும் எழுதி வந்தார்.

அவரது முன்றாவது படம், இருமொழி த்ரில்லராக உருவாகியுள்ளது. சஞ்சீவ் எழுதி இந்த படம் நேரடியாகத் தெலுங்கில் உருவாகிறது. லைகா நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இதன் அறிவிப்பு விழா இன்று (அக்.1) நடைபெற்றது.

அப்போது பேசிய ஐஸ்வர்யா, "இந்த படத்தை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் தேவையான, குடும்ப பொழுதுபோக்கைக் கொண்ட படமாக இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் மீதமுள்ள நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: அனுக்கிரகன் பட போஸ்டரை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.