ETV Bharat / sitara

என்ஆர்ஐ மீது சல்மான் கான் அவதூறு வழக்கு!

author img

By

Published : Jan 16, 2022, 10:34 AM IST

Salman Khan
Salman Khan

வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் மீது நடிகர் சல்மான் கான் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

ராய்காட் (மகாராஷ்டிரா) : அமெரிக்க வாழ் இந்தியர் கேத்தன் காக்கட் என்பவருக்கும் நடிகர் சல்மான் கானுக்கும் இடையே நிலப் பங்கீடு தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் குறித்து கேத்தன் காக்கட் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட கணக்கில் அவதூறாக கருத்துகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தரப்பு, என்ஆர்ஐ கேத்தன் காக்கட் மீது சிவில் அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலப் பிரச்சினை 1990ஆம் ஆண்டுகளில் இருந்தே தொடர்கிறது. நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கானுக்கும் காக்கட்டுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பத்திரிகையாளரை மிரட்டியதாக விஜய்காந்த் மீதான வழக்கு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.