ETV Bharat / opinion

இந்தியா அமெரிக்காவின் பொருளாதார வழித்தடப்பாதை.. மோடி, பைடனின் தேர்தல் வெற்றிக்கு உதவுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 11:00 AM IST

Updated : Sep 15, 2023, 2:57 PM IST

இந்தியா அமெரிக்காவின் பொருளாதா வழித்தடப்பாதை
இந்தியா அமெரிக்காவின் பொருளாதா வழித்தடப்பாதை

India Middle East Economic Corridor: இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடப்பாதை இந்தியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஆனால் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இது உதவுமா என்பதை ஆராய்கிறார் ஈடிவி பாரத் நெட்வொர்க் எடிட்டர் பிலால் பாட்.

ஐதராபாத்: 2013ம் ஆண்டில் எல்லை சாலை திட்டம் என்ற மாபெரும் பொருளாதார உட்கட்டமைப்பு திட்டத்தை சீனா அறிவித்தது. இத்திட்டத்தில் இணையவுள்ள உறுப்பு நாடுகளின் வழியே தனது பொருளாதார வழித்தடத்தை பதிக்கவிருக்கிறது இத்திட்டம். இந்த பிஆர்ஐ (எல்லை சாலை திட்டம் அல்லது Border Road Initiative) திட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை. இத்திட்டத்தின் 10வது ஆண்டு தினத்தை கொண்டாடும் முன்னதாக ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு இணையான மற்றொரு முன்மொழிவுடன் வந்துள்ளன. இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடம்(IMEEEC) ( India Middle East Europe Economic Coridor) குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் சவுதி அரேபியா வழியாக இணைத்து விரைவான தடையற்ற வர்த்தகத்திற்கு உதவப்போகும் இந்த வழித்தடத்திற்கு, டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு முன்வந்துள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல , சீனாவின் எல்லைச்சாலை திட்டத்திற்கு சரியான மாற்று திட்டத்தை முன்வைப்பதோடு, பாகிஸ்தானின் புவியியல் சார்ந்த முக்கியத்துவத்தையும் இந்த திட்டம் குறைக்கிறது. இந்தியாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் தரை வழிப்பாதையில் இயற்கையான மற்றும் வரலாற்று ரீதியிலான பாதை பாகிஸ்தான் வழியே செல்கிறது. ஆனால், இந்தியாவோ பாகிஸ்தானோ தற்போது இந்த பாதையை பயன்படுத்த முடியாது. இரு நாடுகளுக்கிடையிலான பிரிவினை மற்றும் அதனைத் தொடர்ந்த பிரச்சனைகள் இயற்கையான இந்த பாதைகளை லாபமற்றவையாக மாற்றிவிட்டன.

ஆனால் தற்போது ஆசியாவும், ஐரோப்பிய நாடுகளும் IMEEEC எனும் புதிய பாதையின் வழியே இணைக்கப்பட உள்ள நிலையில், இந்த பாதையைப் பொறுத்தவரையிலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒரு பொருட்டே இல்லை என கூறலாம். சீனாவின் பிஆர்ஐ திட்டமானது பாகிஸ்தானில் நடைமுறையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான மாகாணங்களில் கில்ஜித் பல்திஸ்தான் மற்றும் பலோசிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிரான மனநிலையோடு இயங்கி வருகின்றன. பாகிஸ்தானில் இத்திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே கசப்புணர்வைத்தான் எதிர்காலத்தில் கொண்டு வரும்.

தற்போது இந்தியாவுக்கான மாற்றுப்பாதை தூரத்து வெளிச்சமாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதனை தடை செய்ய பாகிஸ்தான், சீனா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் முயற்சி செய்யலாம். சவுதிஅரேபியா புதிய பொருளாதார பாதையின் கூட்டாளியாக இருந்த போதிலும் பாகிஸ்தானின் நீண்டநாள் நண்பன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், பொருளாதார பாதைக்கான விதை சவுதி அரேபியாவில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில்தான் தூவப்பட்டது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகிறது.

எனவே சவுதி அரோபியா மூலம் இத்திட்டத்தை முடக்குவதற்கு வாய்ப்பே இல்லை. இஸ்ரேலின் தலையீட்டுக்கு சிறிது வாய்ப்பிருந்த நிலையில், அந்நாட்டுக்கும் சவுதிக்கும் இடையே அணுக்கமான தீர்வுக்கும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த பொருளாதாரப் பாதையானது பெரும்பாலும், கப்பல், ரயில்வே போக்குவரத்து மூலமே இணைக்கப்படும். இந்தியா மற்றும் அதன் பிற வர்த்தக நாடுகளுக்கிடையிலான பயண தூரத்தை 35 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதிகாரப்பூர்வ பாதை வரைபடம் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றாலும், எரிபொருள், மின்சாரம் மற்றும் கேபிள்கள் இணைப்பிற்காக கடலுக்கு கீழ் செல்லும் வழித்தடங்களும் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் மாதங்களில் விரிவான திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஆசியாவில் உள்ள ஈரானின் சபஹர் துறைமுகத்துடனான இணைப்பிற்கு நீண்டகாலமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது பேருதவியாக இருக்கும். சபஹர் துறைமுகம் மற்றும் ஜாஹதான் நகரங்களுக்கிடையே ரயில் பாதை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க நீண்டகாலமாக இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால் இதற்கு சீனாவும், பாகிஸ்தானும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இதே போன்ற ஒரு நிலைமை ஈரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டால், புதிய பொருளாதார வழித்தடத்தில் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.

சபஹர் என்பது ஈரானின் சிஸ்தான்-பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இந்தியாவின் துறைமுகமாகும். தற்போது ஜி 20 நாடுகள் இந்தியா சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், ஐரோப்பா இடையே வர்த்தக பாதை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன. உறுப்பு நாடுகள் அனைத்துமே கிட்டத்தட்ட இந்த துறைமுகத்தால் பலனடைய உள்ளன. இந்த பொருளாதார பாதைக்கு இணையாக மின்தடம் மற்றும் எரிவாயு குழாய்களும் அமைக்கப்படும். இது உறுப்பு நாடுகள் எரிபொருள் தேவைக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்த பொருளாதார பாதை சீனாவின் பார்டர் ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்திற்கு சரியான போட்டியாக அமைவதோடு, தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் சீனாவின் கோட்டையை உடைக்கும். சீனாவின் விரிவாக்க கொள்கைகளால் வெறுப்பிலிருக்கும் அனைத்து நாடுகளையும் இந்த பாதை ஒருங்கிணைக்கும். இந்தியா பிராந்தியத்தில் சீனாவுக்கு சரியான மாற்றாக அமைவதையே மேற்குலக நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி, இந்தியாவில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற போது, சீனாவுடனான பொருளாதார பாதை திட்டத்திலிருந்து வெளியேறுவதை அறிவித்தார். ஆப்ரிக்காவில் பலவீனமான நாடுகள் மீதான சீனாவின் தவறான கொள்கையும் கூட, ஆப்ரிக்க யூனியன் நாடுகளை ஜி20 பக்கம் திசை திருப்பி இந்தியாவின் தலைமையை ஏற்கச் செய்வதற்கு போதுமானதாக உள்ளது.

சரி இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு வரலாம். இந்த பொருளாதார பாதை திட்டம் இரு தலைவர்களின் சாதனைப்பட்டியலில் கண்டிப்பாக ஒரு மதிப்பை உயர்த்தும். டிரம்பைப் போலல்லதாது, இஸ்ரேலிய பிரசச்னையில் முடிவெடுக்க முடியாது திணறுபவராக பிடென் விமர்சிக்கப்படுகிறார். யூதர்களின் செல்வாக்கு மிகுந்த சர்வதேச அரங்கில் இது பிடெனுக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. மாறாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகத்தை அமைத்தார். இது யூதர்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.

தற்போது சவுதி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பொருளாதார பாதையின் அங்கமாக உள்ளன. தற்போது அமெரிக்க தலையீட்டின் மூலம் இரு நாடுகளிடையே சமாதானம் ஏற்படுவதால், இஸ்ரேலிய மற்றும் அரபுலக பிரச்சனைகளில் ஒரு தீர்வு கிடைக்கும். இஸ்ரேலை ஒரு நாடாக சவுதி அங்கீகரிக்கக் கூடும். வரவிருக்கும் தேர்தல் ஆண்டில் இந்த ஒப்பந்தம் மோடி, பிடன் என இருவருக்குமே வாக்கு வங்கியாக மாறுகிறதா என்பதை கவனிப்பது சுவாரஸ்யமளிக்கக் கூடியது தான்.

Last Updated :Sep 15, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.