ETV Bharat / lifestyle

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 2

author img

By

Published : May 7, 2019, 10:28 AM IST

Updated : May 7, 2019, 1:06 PM IST

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை உப்பு வாங்கலாமாம்! அது எப்படி என்று இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்...

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 2

அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:

  • ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
  • வட இந்தியர்கள் நீண்டதூர புனிதப் பயணங்களை அட்சய திருதியை நாளில்தான் தொடங்குவார்கள்.
  • ஒடிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை நாளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
  • பிகார், உத்தரப்பிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
  • அட்சய திருதியை நன்னாளில்தான் உணவுக் கடவுளான அன்னப்பூரணி அவதரித்தாள்.
  • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால்கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
  • அட்சய திருதியை நாளில்தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
  • அமாவாசைக்கு மூன்றாவது நாள் அட்சய திருதியையன்று மூன்றாம் எண்ணுக்கு அதிபதி குரு, உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
  • ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
  • அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும். ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
  • அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
  • அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
  • ரிஷபதேவர் என்னும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
  • அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைப்பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
  • மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

இது போன்றும் இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை மூன்றாம் பாகத்தில் காணலாம்.

அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:

  • ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
  • வட இந்தியர்கள் நீண்டதூர புனிதப் பயணங்களை அட்சய திருதியை நாளில்தான் தொடங்குவார்கள்.
  • ஒடிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை நாளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
  • பிகார், உத்தரப்பிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
  • அட்சய திருதியை நன்னாளில்தான் உணவுக் கடவுளான அன்னப்பூரணி அவதரித்தாள்.
  • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால்கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
  • அட்சய திருதியை நாளில்தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
  • அமாவாசைக்கு மூன்றாவது நாள் அட்சய திருதியையன்று மூன்றாம் எண்ணுக்கு அதிபதி குரு, உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
  • ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
  • அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும். ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
  • அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
  • அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
  • ரிஷபதேவர் என்னும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
  • அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைப்பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
  • மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

இது போன்றும் இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை மூன்றாம் பாகத்தில் காணலாம்.

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 1

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 3

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 4

Intro:Body:Conclusion:
Last Updated : May 7, 2019, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.