ETV Bharat / jagte-raho

தாய், மகள் தற்கொலை! ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

author img

By

Published : Sep 23, 2020, 11:33 AM IST

viluppuram family suicide
viluppuram family suicide

கோயிலுக்கு செல்வதாகக் கூறி தனது இரு மகள்களை அழைத்துச் சென்ற தாய், தன் மகள்களுக்கு நஞ்சு கொடுத்து, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் இருவர் உயிரிழந்த நிலையில், சிறுமி ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விழுப்புரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (45). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும் பவித்ரா (17), ஷர்மி (11) என்ற இரு மகள்களும் உள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கோயிலுக்கு செல்வதாகக் கூறி தனது இரு மகள்களுடன் சென்றுள்ளார் கவிதா

ஆனால், அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இச்சூழலில், இன்று அவர்கள் மூவரும் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே கிடந்துள்ளனர். காலை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரதமரால் பாராட்டப்பட்டவர் மீது கந்துவட்டி புகார்!

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சோதித்து பார்த்ததில், கவிதாவும், பவித்ராவும் மரணித்திருந்து தெரியவந்தது. உயிரோடு இருந்த ஷர்மி மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இறந்த இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.