ETV Bharat / jagte-raho

தாயை இரும்பு கம்பியால் அடித்த மகன்கள்! - மனமுடைந்து தாய் தற்கொலை!

author img

By

Published : Dec 6, 2020, 11:34 PM IST

சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், தாயை மகன்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். மகன்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

sons killed mother in thoothukudi
sons killed mother in thoothukudi

தூத்துக்குடி: தாயை இரும்பு கம்பியால் மகன்கள் அடித்ததால், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாயபெருமாள் (60). இவரது மனைவி ஞானக்கனி (56). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மாயபெருமாள், அவரது மகன்களான முத்துராஜ்(37), செல்வகுமார் (35) ஆகியோருக்கு இடையே சொத்து பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இச்சூழலில், டிசம்பர் 24ஆம் தேதி அன்று ஏற்பட்ட பிரச்னையில் மகன்கள் இருவரும் சேர்ந்து, இவர்களது தாயான ஞானக்கனியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஞானக்கனி நவம்பர் 25ஆம் தேதி அன்று நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாயபெருமாள் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துராஜ், செல்வகுமார் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.