திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு சடலமாக மரத்தில் தொங்கியதைக் கண்ட மக்கள் குரிசிலாப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இறந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், "வாணியம்பாடி அடுத்த ஏரி வட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (35), அதே பகுதியை சேர்ந்த ரீட்டா (33) என்பவருக்கும் இடையே தகாத உறவின் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்து இருவரும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர்" என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை