ETV Bharat / jagte-raho

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - முகவர் கைது!

author img

By

Published : Jan 8, 2020, 6:15 PM IST

arrest
arrest

சென்னை: போலி விசா மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட முகவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் மூர்த்தி. எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த மூர்த்தி, சரியான வருவாய் இல்லாததால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய முடிவெடுத்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த டோமினிக் ராஜ் என்பவரை சந்தித்துள்ளார்.

அா்மெனியா நாட்டில் நல்ல சம்பளத்தில் எலெக்ட்ரிசியன் வேலை உள்ளதாகவும், ஆனால் முதலில் 5 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றும் மூர்த்தியிடம், டோமினிக் ராஜ் கூறியுள்ளார். மூா்த்தியும் 5 லட்ச ரூபாயை வட்டிக்கு கடன் வாங்கி டோமினிக்கிடம் 2018ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். அடுத்த சில வாரங்களில் போலி விசா தயாரித்து, மூர்த்தியை சென்னையில் இருந்து ரஷ்யா வழியாக அா்மெனியா நாட்டிற்கு டோமினிக் அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால், மூர்த்தி வந்தது போலி விசா என்பதைக் கண்டறிந்த அா்மெனிய விமான நிலைய அதிகாரிகள், அவரை வெளியேவிடாமல் மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பினர். இதையடுத்து, ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய மூா்த்தி, டோமினிக்கை தேடிக் கண்டுபிடித்து, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த பின்னர், பணத்தைத் தர முடியாது என்று கூறியதோடு, மூா்த்தியை மிரட்டியுமுள்ளார் டோமினிக். இதையடுத்து மூா்த்தி சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல்துறையினர், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டோமினிக் ராஜை கைது செய்து, ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இதையும் படிங்க: குடிபோதையில் தலைமைக் காவலரைத் தாக்கிய நபர் கைது!

Intro:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த தரகர் கைது
Body:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த தரகர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் மூர்த்தி 28 இவர் எலெக்ட்ரிசியன் ஆக பணியாற்றி வந்திருந்தார். சரியான வேலை இல்லாததால் வெளிநாட்டில் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எழுந்துள்ளது இதை பற்றி நண்பர்களிடம் கூறியபோது சூளைமேட்டை சேர்ந்த டோமினிக் ராஜ் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறார் என்பது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டார்

இதையடுத்து சென்னை வந்த மூா்த்தியிடம் டோமினிக் ராஜ் அா்மெனியா (armenia) நாட்டில் நல்ல சம்பளத்தில் எலக்டிரிசியன் வேலை உள்ளது.ஆனால் முதலில் பணம் ரூ.5 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலை மோகத்தில் மூா்த்தி ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி டோமினிக்கிடம் 2018 ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய டோமினிக் ராஜ் அடுத்த சில வாரங்களில் போலி விசா தயாரித்து சென்னையில் இருந்து ரஷ்யா வழியாக அா்மெனியா நாட்டிற்கு அனுப்பிவைத்தாா்.

ஆனால் அங்கு போலி விசா என்பதை அா்மெனியா நாட்டில் யரிவன் விமான நிலையத்தில் குடியுறிமை சோதணை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். அதோடு மூா்த்திக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள நிறுவனமே அா்மெனியாவில் இல்லை என்று தெரியவந்தது.எனவே மூா்த்தியை விமான நிலையத்தை விட்டு வெளியேவிடாமல் மீண்டும் சென்னைக்கே ரஷ்யா வழியாக திருப்பி அனுப்பினா்.

இதையடுத்து ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய மூா்த்தி, டோமினிக்கை தேடிக்கண்டுப்பிடித்து,பணத்தை திருப்பி கேட்டாா்.டோமினிக் ராஜ் 2 மாதங்களில் பணத்தை திருப்பி தருவதாக கூறி 2 ஆண்டுகளாக கடத்தினாா்.

தற்போது டோமினிக் ராஜ் பணம் கொடுக்க முடியாது என்று கூறியதோடு மூா்த்தியை மிரட்டினாா். இதையடுத்து மூா்த்தி சென்னை விமான நிலைய போலீசில் புகாா் செய்தாா்.


விமான நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டோமினிக் ராஜீயை கைது செய்து விசாரணை நடத்தினா்.
பின்பு டோமினிக் ராஜ் மீது வெளிநாட்டு வேலை ஆசைக்காட்டி பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்து ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.