ETV Bharat / jagte-raho

உருட்டுக் கட்டையால் அடித்துக் காவலாளி கொலை!

author img

By

Published : Dec 26, 2019, 1:46 PM IST

Updated : Dec 26, 2019, 4:11 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

watchman
watchman

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், தற்போது பணியிலிருக்கும் ரத்னகுமாரிடம் நீ எப்படி இங்கு பணிபுரியலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சரவணன் தான் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் ரத்னகுமாரின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ரத்னகுமாரை அருகிலிருந்தோர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல் துறையினர், தாக்குதல் நடத்திய சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவலாளி ரத்னகுமார் பணிசெய்த அடுக்குமாடி குடியிருப்பு

இந்நிலையில், ரத்னகுமார் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மாம்பலம் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீஸ் வலைவீச்சு!

Intro:Body:உருட்டை கட்டையால் தாக்கியதில் வாட்ச்மேன் பலி..

சென்னை அரும்பாக்கம் பகுதியை ரத்னகுமார்(53).இவர் தி.நகரில் உள்ள திருமலை சாலை பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வாட்ச் மேனாக கடந்த 19ஆம் தேதி பணிக்கு சென்றுள்ளார். பின்னர் முன்னதாக இந்த அப்பார்ட்மென்டில் வாட்ச்மேனாக பணிப்புரிந்த புரசைவாக்கத்தை சேர்ந்த சரவணன் என்ற நபரை ஒழுங்காக பணிப்புரிவதில்லை என நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி அப்பார்ட்மெண்டிற்கு வந்த சரவணன் தற்போது வாட்ச்மேனாக பணிப்புரியும் ரத்னகுமாரிடம் எப்படி இந்த அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பனிப்புரியலாம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு உள்ளார்.

பின்னர் வாக்குவாதம் முற்றியதால் சரவணன் தான் கையில் கொண்டு வந்த உருட்டுகட்டையால் ரத்னாகுமார் மண்டையில் அடித்து உள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த சரவணனை அருகிலிருந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்கிய சரவணனை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரத்னகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை மாம்பலம் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர்.Conclusion:
Last Updated : Dec 26, 2019, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.