ETV Bharat / international

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 1:57 PM IST

21 மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது
21 மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது

Rameswaram Fisherman release: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 21 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படையினர் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28ஆம் தேதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

அப்போது மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நான்கு விசைப்படகையும், 22 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள மீனவர்களின் சிறைக்காவல் தேதி முடிந்து, இன்று இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து 22 மீனவர்களையும் விசாரணை நடத்திய நீதிபதி, 21 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் தாய், மகள், பக்கத்து வீட்டுக்காரர் மீது கொடூர தாக்குதல்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.