பாலி: இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு இன்று (நவம்பர் 15) தொடங்கியது. இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகிய நாடுகளில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசினர்.
முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களான மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா - அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டு செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல குவாட், ஐ2யூ2 போன்ற புதிதாக அமைக்கப்படும் நாடுகளின் குழுக்களில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்தனர்.
-
Happy to have met @POTUS @JoeBiden at the @g20org Summit in Bali. We had fruitful exchanges on key issues. pic.twitter.com/il7GbnOIpS
— Narendra Modi (@narendramodi) November 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy to have met @POTUS @JoeBiden at the @g20org Summit in Bali. We had fruitful exchanges on key issues. pic.twitter.com/il7GbnOIpS
— Narendra Modi (@narendramodi) November 15, 2022Happy to have met @POTUS @JoeBiden at the @g20org Summit in Bali. We had fruitful exchanges on key issues. pic.twitter.com/il7GbnOIpS
— Narendra Modi (@narendramodi) November 15, 2022
இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர் மோடி