வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறாரா கிம் ஜாங் உன்?

author img

By

Published : May 4, 2022, 2:12 PM IST

North Korea

ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தகவல் தெரிவித்துள்ளன.

வடகொரியா: வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடப்பாண்டில் வடகொரியாவின் ஆயுத சோதனைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வேகத்தில் காணப்படுவதாகவும், ஏவுகணை திட்டங்களை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தகவல் வெளியானது. குறிப்பாக கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து வடகொரியா ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், வடகொரியா ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட தினவிழாவையொட்டி நடந்த ராணுவ அணிவகுப்பில், அந்நாட்டின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த விழாவில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுதங்களை மிக வேகமாக வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை மிகவும் சக்திவாய்ந்தது என்றும், அதிகவேகமாக பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி- டென்மார்க் ராணி சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.