நேரலையில் நித்தியானந்தா தரிசனம்- பேஸ்புக்கில் ஸ்பெஷல் என்ட்ரி

author img

By

Published : Jul 13, 2022, 1:16 PM IST

நேரலையில் நித்தியானந்தா தரிசனம்- பேஸ்புக்கில் ஸ்பெஷல் எண்ட்ரீ

கைலாசா எனும் மர்ம தீவில் வாழ்ந்து வரும் நித்தியானந்தா இன்று (ஜூலை 13) இரவு அவரது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து அவரது பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க உள்ளார்.

நித்தியானந்தா பல சர்ச்சை வழக்குகளில் சிக்கியுள்ளார்.இந்நிலையில் காவல்துறையிடமிருந்து தப்பி தலைமறைவாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்கா கண்டத்தில் ஒரு தீவினை விலைக்கு வாங்கி கைலாசா என பெயரிட்டு தனி நாடு என அறிவித்தார். அங்கு இருந்த பல அறிவுரை வீடியோக்கள், தரிசனம் என பலவாறு பகீர் கிளப்பும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமாக இருந்து. இப்படிபட்ட விறுவிறுப்பான நித்தியானந்தாவின் வீடியோக்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகவில்லை. நித்தியானந்தா இறந்ததாகவும், ஜீவ சமாதி அடந்ததாகவும் பல செய்திகள் வெளியாகின. தொடர்ந்து அவர் குறித்த பொய்யான தகவல்கள் பரவின. இதனையடுத்து தான் உடல்நிலை சரியில்லாததால் சமாதி நிலையில் இருப்பதாகவும், விரைவில் பக்தர்கள் முன் தோன்றுவேன் எனவும் சமூக வலைதளங்களில் நித்தியானந்தா விளக்கமளித்தார்.

இந்நிலையில் இன்று(ஜூலை 13) உலகம் முழுவதும் இருக்கும் பல ஆன்மிக குருக்களுக்கான புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு பூஜைக்காக நித்தியானந்தா அவரது பக்தர்களுக்காக சிறப்பு நேரலையில் தரிசனம் செய்ய உள்ளதாக அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறியவாறு அவரின் பக்தர்கள் மற்றும் சீடர்கள் முன் தோன்ற உள்ளார்.இவரது பேஸ்புக் கணக்கை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

பேஸ்புக்கில் ஸ்பெஷல் எண்ட்ரீ
பேஸ்புக்கில் ஸ்பெஷல் எண்ட்ரீ

இதையும் படிங்க:விரைவில் நித்தியானந்தா ரீஎன்ட்ரீ..! சமாதி முடியப்போகுதாம்-கைலாசா அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.