ETV Bharat / international

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண்!.. யார் தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 10:45 AM IST

Updated : Dec 26, 2023, 11:55 AM IST

Pakistan General Election:பாகிஸ்தான் நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் முதல்முறையாக தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IN A FIRST HINDU WOMAN IN PAKISTAN FILES NOMINATION FOR 2024 ELECTIONS
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் சவீரா பிரகாஷ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் புனர் மாவட்டத்தில் உள்ள பிகே-25 பொது தொகுதிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு தேர்தலில் பொதுத் தொகுதியில் இந்து பெண் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தான் நாட்டின் 16வது தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் 2024, பிப்ரவரி 8ஆம் தேதி அந்நாட்டில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக பொதுத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவீரா பிரகாஷ் என்ற அப்பெண் புனர் மாவட்டத்தில் பிகே-25 பொது தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ், ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார்.

மேலும், இவர் அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் (பிபிபி) உறுப்பினராக இருந்துவருகிறார். இதற்கிடையே, இவரின் மகள் சவீரா பிரகாஷ் தனது தந்தை உறுப்பினராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் இந்த தேர்தலில் களம் காண்பதற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனங்கள் இது குறித்து வெளியிட்ட செய்திகளை குவாமி வதன் கட்சியை சேர்ந்த சலீம் கான், புனரில் இருந்து வரவிருக்கும் 'பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் பெண் பிரகாஷ்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியின் 2022 பட்டதாரியான சவீரா பிரகாஷ், புனரில் உள்ள PPP மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராக உள்ளார். சமூகத்தின் நலனுக்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்படுவதையும் ஒடுக்குப்படுவதையும் ஒழிக்கும் நடவடிக்கையில் இவர் தொடர்ந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். இதனிடையே, இவர் டிசம்பர் 23 அன்று தனது வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: 2023ல் தமிழக அரசின் சாதனைகள் முதல் பேரிடர்கள் வரை ஒரு அலசல்..!

Last Updated : Dec 26, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.