ETV Bharat / international

இந்தியா - கனடா விவகாரம்; புதிய பிரதமர் கருத்துக்கணிப்பில் பின்தங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:28 PM IST

canada-new-poll-puts-pierre-poilievre-as-preferred-choice-for-pm-trudeau-trails
கனடா-இந்தியா பிரச்னை: புதிய பிரதமர் கருத்துக்கணிப்பில் பின்தங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Canada New poll puts Pierre Poilievre as preferred choice for PM: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விட எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியெர்ரே பொக்லீஎவரே வரும் தேர்தலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என 40 சதவீத கனடா குடிமக்கள் தெரிவித்துள்ளதாக குளோபல் செய்திகளுக்கான New Ipsos நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளன.

கனடா (ஒட்டாவா): கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விட எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியெர்ரே பொக்லீஎவரே, வரும் தேர்தலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என 40 சதவீத கனடா குடிமக்கள் தெரிவித்துள்ளதாக குளோபல் செய்திகளுக்கான New Ipsos நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியெர்ரே பொக்லீஎவரே, லிபரல் கட்சியை விட அதிக பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குளோபல் செய்திகள் தெரிவிக்கின்றன.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியேர்ரே பொக்லீஎவரே பிரதமராக இருப்பதற்கு சிறந்த தேர்வு என 40 சதவீத கனடா மக்கள் தெரிவித்துள்ளதாகவும், இது கடந்த வருட கருத்துக்கணிப்பை விட 5 புள்ளிகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தற்போது கனடா பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த கருத்துக்கணிப்பின்படி, பிரதமராக இருப்பதற்குச் சிறந்த தேர்வு என கனடா மக்கள் 31 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ இருக்கும் லிபரல் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் தற்போது நடைபெற்ற கருத்துக்கணிப்பின்படி 4 புள்ளிகள் சரிந்து, 22 சதவீத மக்கள் பிரதமராக இருப்பதற்கு சிறந்த தேர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கனடா நாட்டின் பொருளாதாரம் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் மக்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகளை பியேர்ரே பொக்லீஎவரே சரி செய்ய முடியும் என மக்கள் நம்புவதாக இந்த கருத்துக்கணிப்பு உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தற்கு, ஆதாரங்களைப் பிரதமர் வெளியிட வேண்டும் என்று பியேர்ரே பொக்லீஎவரே தெரிவித்தாக கூறப்படுகின்றன.

பியேர்ரே பொக்லீஎவரே கனடாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் அனைத்து உண்மைகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ஆதாரங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பின்னரே கனடா மக்கள் முடிவுகள் இருக்கும். மேலும், இதுவரை பிரதமர் உண்மைகளைத் தெரிவிக்கவில்லை, அவர் அறிக்கை மட்டுமே வழங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றால் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை இந்த இடைவெளி காட்டுகிறது என்று Ipsos CEO டாரெல் பிரிக்கர் கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்து வரும் தேர்தலிலும் லிபரல் கட்சியை மீண்டும் வழிநடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் New Ipsos கருத்துக்கணிப்பின்படி, 60 சதவீதம் கனடா மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்ததாகக் கூறப்படுகின்றன. மேலும், 2025ஆம் ஆண்டு வரை புதிய ஜனநாயக கட்சி (NDP) லிபரல் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

New Ipsos கருத்துக்கணிப்பின்படி, 53 சதவீதம் 2025ஆம் ஆண்டு கனடா தேர்தலில் NDP தனித்துப் போட்டியிட வேண்டிய நேரம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றன. 47 சதவீதம் நபர்கள் NDP கட்சி லிபரல் கூட்டணியுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக Ipsos கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி குளோபல் செய்தி தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: கல்வி கற்க வந்த மணிப்பூரைச் சேர்ந்த 23 குக்கி மாணவர்கள்: இரு கரம் நீட்டி வரவேற்ற கண்ணூர் பல்கலைக்கழகம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.