ETV Bharat / international

வெளிநாடு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? பூஸ்டர் ஊசி குறித்த முக்கிய அறிவிப்பு

author img

By

Published : May 13, 2022, 6:24 PM IST

பூஸ்டர்
பூஸ்டர்

வெளிநாடு பயணம் மேற்கொள்வோர் கரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது. இதுவரை 190 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அண்மையில் 5வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் , பூஸ்டர் டோஸ் அதாவது 3வது டோஸ் செலுத்திக் கொள்வது தொடர்பாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள , 2வது டோஸ் செலுத்திய நாளில் இருந்து 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை, தொழில் ரீதியாக வெளிநாடு செல்வோர் 9 மாத இடைவெளிக்கு பதிலாக 3 மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்...

இதையும் படிங்க: 'நம் நாட்டிலேயே பல்வேறு வகை உணவு இருக்கும்போது, வெளிநாட்டு உணவு எதற்கு..?' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.