ETV Bharat / international

அமைதி ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா - ஆப்கான் மீது தாக்குதல்

author img

By

Published : Dec 12, 2020, 10:27 PM IST

US military
US military

அமெரிக்கா-தலிபான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கத்திற்கும் 15 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், அங்கு தலிபான் அமைப்பை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தலிபானுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கையெழுத்தானது.

இந்தச் சூழலில், அமைதி ஒப்பந்ததிற்கு குந்தகம் விளையும் விதமாக இரு தரப்பும் தற்போது மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தலிபான் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.

அதற்கு பதிலடியளிக்கும் விதமாக அமெரிக்க விமானப்படையினர் ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. தலிபான் அமைப்பை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தலிபான் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதித்த அல்ஜீரிய அதிபர் மாயம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.