ஆப்கானிஸ்தான் பெண்கள் குறித்து மலாலா கவலை!

author img

By

Published : Aug 16, 2021, 9:22 PM IST

malala
malala ()

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குறித்து ஆழமாக கவலையுறுகிறேன் என மலாலா கூறியுள்ளார்.

நியூயார்க் : ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்களின் பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன்” என மலாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது முழுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மக்கள் உரிமை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன். அங்கு உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், அங்குள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • We watch in complete shock as Taliban takes control of Afghanistan. I am deeply worried about women, minorities and human rights advocates. Global, regional and local powers must call for an immediate ceasefire, provide urgent humanitarian aid and protect refugees and civilians.

    — Malala (@Malala) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாகிஸ்தானில் பெண் கல்விக்கு குரல் கொடுத்ததற்காக மலாலா தாலிபன் உள்ளிட்ட பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் காப்பாற்றப்பட்ட மலாலா தற்போதும் பெண் கல்வி, மனித உரிமை, அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், தாலிபன்களுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்பு படைகள் விலகிய நிலையில் தாலிபன்கள் நாட்டை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாலிபன்களுடன் நட்புறவை மேம்படுத்த தயார் - சீனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.