ETV Bharat / international

உலகளவில் ஒரே நாளில் 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Sep 24, 2020, 3:20 PM IST

oe
or

உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 198 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறுகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 3 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 702 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 82 ஆயிரத்து 30ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 198 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் 86 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.