நியூயார்க்கில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் தீக்கிரை!

author img

By

Published : Jan 10, 2022, 12:26 PM IST

New York city fire

அமெரிக்காவில் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் டுவின் பார்க் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோரச் சம்பவம் குறித்து நகர மேயரின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் ஆடம்ஸ் கூறுகையில் “ஞாயிற்றுக்கிழமை விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.

13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 9 பேர் குழந்தைகள் ஆவார்கள். மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

US: 19 people including 9 children die in New York city fire
நியூயார்க்கில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் தீக்கிரை!

காயமுற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகையினால் அப்பகுதியில் உள்ள பலருக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

அமெரிக்காவில் 1990ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்து ஒன்றில் 87 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.