ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைக்க முடிவு!

author img

By

Published : Aug 9, 2020, 7:25 PM IST

us
us

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் ஐந்தாயிரத்திற்கும் கீழ் குறைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்குப் பலமாக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதலும் நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அரசு தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மேற்கொண்டு, கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி," 14 மாதங்களுக்குள் அமெரிக்கப் படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்காவும், அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடான தொடர்பை துண்டிக்க தலிபானும் ஒப்புக்கொண்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் ஐந்தாயிரத்திற்கும் கீழ் குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர், "அமைதி ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக வரும் நவம்பர் மாதத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் ஐந்தாயிரத்திற்கும் கீழ் குறைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.