ETV Bharat / entertainment

Ponniyin Selvan 2: த்ரிஷாவுடன் ரொமான்ஸ்.. கார்த்தி மனைவி கூறியது என்ன?

author img

By

Published : Apr 17, 2023, 9:07 AM IST

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான விளம்பர நிகழ்ச்சி கோவையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோயம்புத்தூர்: மணிரத்னம் இயக்கத்தில் பல்வேறு பிரபல நடிகர், நடிகைகள் நடிப்பில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சிகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக விளம்பர நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் (Prozone) என்ற தனியார் மாலில் நடைபெற்றது.

இதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டு மேடையில் உரையாற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

அதைத் தொடர்ந்து நிகழ்சி மேடையில் பேசிய நடிகர் கார்த்திக், "முதலில் அவரது முதல் படமான பருத்திவீரன் படத்தில் வரும் 'என்ன மாமா சவுக்கியமா' என கோவை மக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் நம்ம ஊருக்கு வந்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொழுது சவால் ஒன்று இருந்தது. அது படித்தவர்களுக்கும் பிடிக்க வேண்டும், படிக்காதவர்களுக்கும் புரிய வேண்டும் இவை இரண்டும் பெரிய சவால்களாக இருந்தன.

முதலில் படித்தவர்களுக்கு பிடிக்க வைப்பது மிகவும் சிரமம் எனக் கூறிய அவர், படித்தவர்கள் புத்தகம் எடுத்துக் கொண்டு வருவார்கள். படிக்காதவர்கள் கதையை புரியவில்லை என கூறுவார்கள். எனவே இரண்டு பேருக்கும் பிடிப்பது போல் படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம் இதனை இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது குழுவினர் மிகவும் சிறப்பாக செய்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கின்ற விஷயங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளது.

இதில் அன்பான காதலும் உள்ளது, ஆக்ரோஷமான காதலும் உள்ளது என தெரிவித்தார். ஆதித்த கரிகாலன் என்கின்ற எரிமலை வெடிப்பதை பார்க்கப் போகிறோம், தான் நினைத்ததை எல்லாம் சாதிக்க வேண்டும் என நினைக்கின்ற நந்தினி இனி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என பார்க்க போகிறோம். ட்விட்டரில் வந்தியதேவன் குந்தவை தான் பேசினார்கள் எனவும் இதனை பிரச்னையாக இழுத்து விடாதீர்கள் என நகைச்சுவைத்தார்.

அவரிடம் உங்களுக்கு (வந்தியதேவனுக்கு) ஒரு ராஜியம் வழங்கப்பட்டு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும். ஆனால் யார் யாருக்கு எந்தெந்த துறைகளை அளிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி பதிலளித்த அவர், காதல்துறை அமைச்சர் - பூங்குழலி, பேரழகுத்துறை அமைச்சர் - நந்தினி, பெண்கள் நலத்துறை அமைச்சர் - குந்தவை, ஆண் அமைச்சர் என்றால் பொன்னியின் செல்வன், சிங்கிள்ஸ் நலத்துறை அமைச்சர் - வந்தியதேவன், உருட்டு அமைச்சர் - ஆழ்வார்கடியான் நம்பி என நகைச்சுவையாக பதிலளித்தார்.

பின்னர் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசிய நடிகர் கார்த்திக், இந்த படத்திலும் தனக்கு இரண்டு வசனங்கள் இருந்ததாகவும் அது, வந்தியத்தேவன் சென்று கொண்டிருக்கும்போது பெரியவர் ஒருவர் வந்து தேவனை பார்த்து எங்கு சென்று கொண்டிருக்கிறாய் என கேட்பார். அப்போது வந்தேதேவன் அந்த பெரியவருக்கு, "ஒரு சொத்து பிரச்சினை அதற்கு தீர்வு கூற வேண்டும். அதற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். அந்த பிரச்சனை என்னவென்றால் சொத்து அண்ணன் மகனுக்கா? அல்லது தம்பி பேரனுக்கா? என்பதுதான் பிரச்சனை, இதற்கு நான் தான் தீர்வு கூற வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் அவர் இதுதான் பொன்னியின் செல்வனின் கதை எனவும் இதனை மிகவும் எளிமையாக ஜெயமோகன் எழுதியிருப்பார் என தெரிவித்தார். மேலும் இது உங்களுக்கு புரிந்ததா என மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், மதுராந்தன் குறித்தும் ஆதித்த கரிகாலன் குறுத்தும் எடுத்து கூறி அப்புறமும் புரியவில்லை என கூறினால் பிச்சு புடுவேன் என நகைத்தார்.

இரண்டாவது வசனம், வந்தியத்தேவன் குந்தவை பார்த்துவிட்டு வரும் போது "நம் இளவரசி இருக்கிறாரே மிகவும் திறமைசாலி நரகத்திற்கு செல்பவர்களை கூட தடுத்து நிறுத்தி சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் நந்தினி அதைவிட திறமைசாலி நரகத்தையே இதுதான் சொர்க்கம் என நம்ப வைத்து சந்தோசமாக அனுப்பியும் விடுவார்கள்" என கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து இவையெல்லாம் படத்தில் இல்லையே என வருத்தம் இருப்பதாகவும் எனவே இங்கு சொல்லி விடுகிறேன் எனவும் தெரிவித்தார். உயிர் உங்களுடையது தேவி என்ற வசனத்திற்கு உங்கள் மனைவி என்ன கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பியதற்கு, ரொமான்ஸ் இல்லாமல் நீங்கள் கதையே நடிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்புவதாகவும், வீட்டில் மட்டும் தான் ரொமான்ஸ் வருவதில்லை என கூறுவார்.

வந்தியத்தேவன் அனைவரையும் பார்த்தும் ஜொல்லு விடுகிறார். ஆனால் கன்னியமாக இருக்கிறார் என இந்த படத்தை பார்த்து கூறினார். இந்த படத்தை பார்த்துவிட்டு முதல் தடவையாக எனது அம்மா படம் சூப்பர் என கூறினார் என்றார்.

இதையும் படிங்க: வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு; அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.