ETV Bharat / entertainment

மருமகனால் பஞ்சாயத்து - திடீரென திருமண வரவேற்பை நிறுத்திய ஷங்கர்!

author img

By

Published : Apr 30, 2022, 8:04 PM IST

மருமகனால் பஞ்சாயத்து - திடீரென திருமண வரவேற்பை நிறுத்திய ஷங்கர்!
மருமகனால் பஞ்சாயத்து - திடீரென திருமண வரவேற்பை நிறுத்திய ஷங்கர்!

கோலிவுட்டில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

தாமோதரன், தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது.

பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கரோனா உச்சத்தில் இருந்த சமயம் என்பதால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். கரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. இதையடுத்து நாளை ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைபெறுவதாகக் கடந்த மாதமே திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர் ஷங்கரும், அவரது மனைவியும்.

ஆனால் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஷங்கரிடம் இருந்து அனைவருக்கும் செய்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பத்து கோடிகளுக்கு மேல் செலவு செய்துவிட்டு தற்போது வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தியதற்கு காரணம் என்ன என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர். இவரும், இவரது நண்பர்களும் பயிற்சிக்கு வரும் பெண்கள் அணியில் உள்ள ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கடந்த ஆண்டு பிரச்சினை எழுந்தது. மேலும் அந்தப் பெண் ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. அந்தப் பெண்ணும் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக இல்லை.

மேலும், இதனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இடையே பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இதனால் இப்போது திருமண வரவேற்பு வைத்தால் பல பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால் தற்போது இந்த நிகழ்ச்சியை ஷங்கர் ஒத்தி வைத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.