ETV Bharat / entertainment

தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள்

author img

By

Published : Sep 29, 2022, 4:49 PM IST

தனுஷ் கட்-அவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த பாண்டிச்சேரி ரசிகர்கள்...!
தனுஷ் கட்-அவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த பாண்டிச்சேரி ரசிகர்கள்...!

நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெளியானதைக் கொண்டாடும் வகையில் அவரது பேனருக்கு புதுச்சேரி ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்தனர்.

புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி அவரது ரசிகர்கள் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனருக்கு பீர் மாற்றும் பாலால் அபிஷேகம் செய்தனர். அதோடு கையில் சூடம் ஏற்றியும் கொண்டாடினர்.

தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’நானே வருவேன்’ திரைப்படம் இன்று(செப்.29) வெளியாகியது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் உள்ள திரையரங்கு ஒன்றில் புதுச்சேரி மாநில தனுஷ் தலைமை ரசிகர் மன்றத்தினர் அவரது பேனருக்கு பீர் அபிஷேகம் செய்தும், பாலபிஷேகம் செய்தும், கையில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்தும் படத்தை வரவேற்றனர். தியேட்டர் முன்பு மேலதாளத்துடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ந

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது பா.ரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.