ETV Bharat / crime

திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு - போக்சோவில் இளைஞர் கைது

author img

By

Published : Feb 10, 2021, 11:30 AM IST

சென்னை: ஆவடி அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Youth arrested in pocso
போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் 14 வயது சிறுமி தாயுடன் வசித்துவருகிறார். கடந்த 31ஆம் தேதி அருகே உள்ள கடைக்குச் சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது தாய், சிறுமியை பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையில் காவல் துறையினர் சிறுமி காணாமல்போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, எர்ணாவூர், சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (20) என்பவர் சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் தனிப்படை அமைத்து காணாமல்போன சிறுமி, சுபாஷ் ஆகியோரைத் தேடிவந்தனர்.

சுபாஷ் பிடியிலிருந்த சிறுமி காவல் துறையினரால் நேற்று (பிப். 9) பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர், காவல் துறையினர் சுபாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி, அவரை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது.

ஆய்வாளர் சாம் வின்சென்ட் தலைமையில் காவல் துறையினர் காணாமல்போனதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை, போக்சோ சட்டத்தின்கீழ் பதிவுசெய்து சுபாஷை கைதுசெய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அடமானம் வைத்த சொத்தை அபகரிக்க முயற்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.