ETV Bharat / crime

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

author img

By

Published : Jul 17, 2022, 8:02 PM IST

சென்னையில் மூன்று வயது சிறுமியிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது
மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த கடப்பேரியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மூன்று வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அருகே இருந்த வீட்டிற்குச் சென்று பெற்றோர் தேடினர்.

அப்போது, அதே தெருவைச் சேர்ந்த பிரேம் குமார் (22) என்ற இளைஞர் சிறுமியிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதை சிறுமியின் பெற்றோர் நேரடியாக பார்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேம்குமாரை அடித்து உதைத்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய சிறப்பு விசாரனையில் மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதை இளைஞர் ஒப்புகொண்டார். இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தந்தைக்குப் புற்றுநோய் சிகிச்சை அளிக்க 'நீட்' தேர்வு எழுதும் மகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.