ETV Bharat / crime

ராஜஸ்தானில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர் கைது!

author img

By

Published : Mar 6, 2021, 4:44 PM IST

ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த உறவினரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

பாலியல் வன்புணர்
பாலியல் வன்புணர்

ராஜஸ்தானின் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சிறுமி காணாமல்போனதாக அருகில் உள்ள இடவா காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிறுமியைத் தேடிவந்தனர். தேடப்பட்ட நிலையில், சிறுமி ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள போகாரன் என்ற பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இது குறித்து விசாரணையில், சிறுமியை அவரது உறவினர் கடத்திச்சென்று போகாரனில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

கடந்த 22 நாள்களாகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரியவந்தது. மேலும், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 45 வயதுடைய உறவினரைக் கைதுசெய்தனர்.

இவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம் எனக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனையும் படிங்க: நள்ளிரவில் வெளியான தொகுதி பங்கீட்டு உடன்படிக்கை - பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.