NCB Operation: தேங்காய் நாரில் கஞ்சா கடத்தியவர்கள் கைது!

author img

By

Published : Nov 22, 2021, 3:11 PM IST

NCB Operation

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேங்காய் நாரில் 215.5 கிலோ கஞ்சா வைத்து கடத்தி வந்த கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) அலுவலரில் கைது செய்தனர்.

சென்னை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக தெரியவந்தது.

இதனடிப்படையில், தென்மாநில பகுதிகளில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், மூன்று ஆப்ரேஷன்களில் பல்வேறு விதமான போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேங்காய் நாரில் கஞ்சா

இது குறித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் கிருஷ்ணகிரி சாலையில் வைத்து அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது 212.5 கிலோ கஞ்சாவை தேங்காய் நாரில் வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.

கஞ்சா கடத்திச் சென்ற இரண்டு பேரை கைது செய்தனர். கஞ்சா கடத்தி வருவதற்கு பாதுகாப்பாக இனோவா காரில் வந்த மேலும் இருவரை சினிமா பாணியில் துரத்திப் பிடித்து அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இவர்கள் கஞ்சாவை வாங்க வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

வானிலையை சாதமாக்கி கடத்த திட்டம்

ஆந்திராவில் இருந்து இந்த கஞ்சாவை கடத்தி ஈரோட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை வாங்க வந்த இருவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கிய காரணத்தினால் சென்னை, ஆந்திரா பகுதிகளில் கனமழை மற்றும் புயல் உருவாகக்கூடிய வாய்ப்பாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல், வாகனத்தில் கஞ்சாவை கடத்தினால் அலுவலர்கள் சோதனை செய்து கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று திட்டம் தீட்டி கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

வானிலையை சாதகமாக பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்ற ரகசிய தகவல் அடிப்படையில் தான் இந்த கும்பல்களை அலுவலர்கள் கைது செய்தனர்.

பார்சல்கள் மூலம் கடத்தல்

இதைப்போன்று, சமீபகாலமாக பார்சல் மூலம் நவீன போதைப் பொருள்கள் கடத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தெரியவந்தது. டார்க் வெப் எனப்படும் இணையதளங்கள் மூலம் இந்த போதைப்பொருள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு கொரியர் மூலம் அனுப்பப்படுகிறது. பரிசுப்பொருள், உணவு பொருள்கள் ஆகியவற்றில் மறைத்துவைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில்தான் பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கூரியர் பார்சல் மூலம் கடத்திச் செல்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து, கொச்சின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு பாக்ஸை அவர்கள் ஆய்வு செய்ததில் போதைப்பொருள்களான 244 gm of Amphetamine, 25 ஸ்டாம்ப் (Stamp) LSD, 2 கிராம் of Methaqualone ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, சுவிங்கம் சாக்லெட் பாக்சில் வைத்து கடத்தி சென்றுள்ளனர். இந்த பார்சல் உண்மையாக சென்றடைய வேண்டிய நபரை கண்டுபிடித்து அவரையும் கைது செய்துள்ளனர்.

9 நாள்களில் 6 பேர் கைது

இதைப்போல கொரியர் மூலம் போதைப்பொருள் ஆர்டர் செய்து பெற்ற மற்றொரு நபரையும் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 gm of Methamphetamine பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக, மூன்று ஆபரேஷன்கள் கடந்த ஒன்பது நாள்களில் நடத்தப்பட்டதன் மூலம் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஆறு பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியும்: பேருந்தை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.