ETV Bharat / city

போலீஸ் கொடுமையால் தீக்குளித்த இளைஞர் - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விசிக

author img

By

Published : Apr 17, 2022, 6:06 PM IST

Updated : Apr 17, 2022, 8:06 PM IST

வேலூரில் போலீசார் துன்புறுத்துதல் காரணமாக இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை விசிகவினர் முற்றுகையிட்டனர்.

போலீஸ் கொடுமையால் தீக்குளித்த இளைஞர்
போலீஸ் கொடுமையால் தீக்குளித்த இளைஞர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலையத்தில் முன்பு சரத் (25) என்பவர் ஏப். 11ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இதையடுத்து சரத் ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரத் தனது வாக்கு மூலத்தில், மேல்பாடி காவல் நிலைய காவலர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மேல்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் பேசனர். அதனடிப்படையில் கட்சயினர் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: தோளப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றது நிரூபனம்!

Last Updated : Apr 17, 2022, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.