திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஏபா நகரில் வசிக்கும், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் மணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில், அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் சமந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது என தெரியவந்தது.
இதனால் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மூடவும் நடவடிக்கை எடுத்து , மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: