ETV Bharat / city

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - காவல் துறை விசாரணை

author img

By

Published : Oct 23, 2021, 10:05 PM IST

வள்ளிமலை மலை மீது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

வேலூர்: காட்பாடியை அடுத்த வள்ளிமலை கிராமத்திலுள்ள மலை மீது அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அந்த சடலம், பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூரைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சக்திவேல் (31) என்பது தெரியவந்தது.

காவல் துறை விசாரணை

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சக்திவேல் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாமக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.