ETV Bharat / city

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

author img

By

Published : Jan 1, 2022, 7:55 AM IST

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

வேலூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: அணைக்கட்டு அருகே முறையே 41, 34 வயதுடைய கணவன்-மனைவி வசித்துவருகின்றனர். இத்தம்பதியின் மகள் (சிறுமி) எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். சிறுமியின் தந்தை விவசாயி.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தந்தை தனது மகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதனை யாரிடமாவது கூறினால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

ஒருகட்டத்தில், சிறுமியின் தாய் இதைப் பற்றி அறிந்துகொண்ட பின்னர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறுமியின் தந்தையைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417 என்ற உதவி எண்ணை அழைத்து குறைகளைப் பதிவுசெய்யுங்கள்.

இதையும் படிங்க: 'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.