வேலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதுடைய இளைஞர். இவருக்கு 14 வயதில் உடன்பிறந்த சகோதரி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் தெரிந்ததோடு அடிக்கடி வயிற்று வலி என சிறுமி கூறியதால் சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் அண்ணனே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு பின் அந்த இளைஞரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக் கடைக்காரர் போக்சோவில் கைது!