ETV Bharat / city

விளம்பர பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இருவர் பலி... அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளருக்கு வலை..!

author img

By

Published : May 10, 2022, 7:57 PM IST

தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் விளம்பர பேனரை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

trichy
trichy

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்பை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை குறித்த விளம்பர பேனர் ஒன்று, ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக பேனர் சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த டிரான்ஸ்ஃபார்மரில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி, 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள், லால்குடி திருமங்கலத்தை சேர்ந்த செல்லதுரை, மண்ணச்சநல்லூர் வாத்தலை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பது தெரியவந்துள்ளது. மேலும், அனுமதியில்லமால் விளம்பர பேனர் வைத்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கமருதீனை கொள்ளிடம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திசையன்விளை மாணவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.