ETV Bharat / city

தங்கம் வென்று கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்ற கோமதி!

author img

By

Published : Apr 23, 2019, 10:04 PM IST

திருச்சி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை கோமதியின் தாயார் ஆனந்தக் கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை தாய் நெகிழ்ச்சி!

கத்தார் நாட்டின் தோஹா நகரில் 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

யார் இந்த கோமதி?

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவரது தந்தை மாரிமுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக இறந்துவிட்டார். கோமதி முழுக்க முழுக்க அரசுப் பள்ளியிலேயே படித்து, வீட்டிலேயே பயிற்சி செய்துள்ளார். பின் கல்லூரியிலும் கடுமையாக பயிற்சி செய்துள்ளார்.

வருமானவரித் துறையில் கால்பதித்த கோமதி

விளையாட்டு இடஒதுக்கீட்டில் இவருக்கு ரயில்வே மட்டும் வருமானவரித் துறையில் வேலை கிடைத்துள்ளது. இதில் வருமான வரித்துறையை தேர்ந்தெடுத்து கடந்த ஒரு வருடமாக பணியாற்றிவருகிறார்.

வறுமையையும் மீறி கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்ற கோமதி

ஆசியப் போட்டியில் தங்கம் வென்றது குறித்து அவரது தாய் ராஜம்மாள் பேசுகையில், 'எனது கணவர் மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தார். யாருமே சரியாக படிக்கவில்லை. கோமதி மட்டுமே உயர்கல்வி வரை பயின்றார். வறுமை காரணமாக எங்களது எதிர்ப்பையும் மீறி அவர் கல்வி பயின்றார். சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டில் ஆர்வம். வீடு முழுக்க அவரது பதக்கங்கள்தான் நிறைந்திருக்கும். தற்போது அவர் ஆசியப் போட்டியில் தங்கம் வென்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்று ஆனந்தக் கண்ணீர் வழிய தெரிவித்தார்.

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை தாய் நெகிழ்ச்சி!
Intro:ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை கோமதியின் தாய் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Body:திருச்சி:
கத்தார் நாட்டின் தோஹா நகரில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடந்தது. இதில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
30 வயதாகும் கோமதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மாரிமுத்து. விவசாயி. இவர் கடந்த 2 வருடம் முன்பு உடல்நலக் கோளாறு காரணமாக மறைந்துவிட்டார். இவரது தாய் ராஜாத்தி.
மாரிமுத்து- ராஜாத்தி தம்பதியருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். ஒரு ஆண் , மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் கடைசியாக பிறந்தவர். இவர்களது வீடு சிறிய அளவிலேயே உள்ளது. இந்த வீட்டில் வாழ்ந்து தான் கோமதி பயின்றுள்ளார்.
கோமதி முடிகண்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாசரேத் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் மற்றும் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரம் பயின்றுள்ளார்.
6ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோதே கோமதி ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அப்போது முதலே பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். சிறிய போட்டிகளிலும் கலந்துகொண்டு டம்ளர், டப்பா என்று வாங்கி குவித்துள்ளார். பள்ளிகளில் நடந்த பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக பெங்களூருவில் தங்கி வருமானவரித் துறையில் பணியாற்றி வருகிறார். விளையாட்டு இடஒதுக்கீட்டில் இவருக்கு ரயில்வே இயலும் வருமான வரி துறையிலும் பணி கிடைத்துள்ளது. ரயில்வே பணியை உதறிவிட்டு தற்போது வருமானவரித் துறையில் பணியாற்றி வருகிறார். அங்கு உள்ள சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த கோமதி தற்போது ஆசிய போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் ராஜம்மாள் கூறுகையில், எனது கணவர் மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தார். யாருமே சரியாக படிக்கவில்லை. கோமதி மட்டுமே உயர்கல்வி வரை பயின்றார். வறுமை காரணமாக எங்களது எதிர்ப்பையும் மீறி அவர் கல்வி பயின்றார். சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டில் ஆர்வம். வீடு முழுக்க அவரது பதக்கங்கள்தான் நிறைந்திருக்கும். தற்போது அவர் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.


Conclusion:ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே கோமதி விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.