ETV Bharat / city

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார்

author img

By

Published : Apr 6, 2019, 5:49 PM IST

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் என்று அமெரிக்கை நாராயணன் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, "திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார், அதேபோல் இந்த தேர்தலில் எங்களது அறிக்கைதான் சூப்பர்ஸ்டாராக விளங்குகிறது.

முந்தைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் 100 நாள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் நகரங்களை விட கிராமங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தது. தற்போது பாஜக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. நடைமுறையில் எது சாத்தியமோ அதை மட்டுமே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கை நாராயணன்

பிரதமர் மோடி ஹிட்லராக மாறிக் கொண்டிருக்கிறார். கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறினார். அதேபோல் அனைவரது வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறினார். இதில் எதையுமே அவர் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வெறுப்பை தான் பிரதமர் மோடி சம்பாதித்தார்.

அதனால் எதிர்காலத்தில் வெறுப்பு அரசியல் வேண்டுமா? இல்லை விருப்ப அரசியல் வேண்டுமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் பிரிவினைவாத ஆட்சியை ஒழித்து மத சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஏதோ இந்துக்களுக்கு எதிரான கட்சி போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கட்சியின் நிலைப்பாடு அது கிடையாது. நாங்களும் ஆன்மிகவாதிகள் தான்" என்று அவர் கூறினார்.

Intro:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


Body:திருச்சி:
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார் என்று அமெரிக்கை நாராயணன் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் தமிழகம் முழுவதும் தேர்தல் நிலவரம் குறித்த கள ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வகையில் திருச்சி வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார் ஆக உள்ளது. முந்தைய திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். அதேபோல் இந்த தேர்தலில் எங்களது அறிக்கைதான் சூப்பர்ஸ்டாராக விளங்குகிறது. தேர்தல் அறிக்கையில் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது சாத்தியமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முந்தைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் 100 நாள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போதும் இதே கேள்வியைத்தான் எதிர்க்கட்சிகள் கேட்டன. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால் நகரங்களை விட கிராமங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தது. தற்போது பாஜக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. நடைமுறையில் எது சாத்தியமோ அதை மட்டுமே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி ஹிட்லராக மாறிக் கொண்டிருக்கிறார். கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறினார். அதேபோல் அனைவரது வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறினார். இதில் எதையுமே அவர் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வெறுப்பை தான் பிரதமர் மோடி சம்பாதித்துக்கொண்டார். அதனால் எதிர்காலத்தில் வெறுப்பு அரசியல் வேண்டுமா? இல்லை விருப்ப அரசியல் வேண்டுமா?என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் பிரிவினைவாத ஆட்சியை ஒழித்து மத சார்பற்ற அணி ஆட்சி அமைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏதோ இந்துக்களுக்கு எதிரான கட்சி போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அந்த நிலைப்பாடு கிடையாது. நாங்களும் ஆன்மிகவாதிகள் தான். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு எதிராகவோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது தலைமை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Conclusion:நடைமுறைகள் எது சாத்தியமோ அதை தான் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.