ETV Bharat / city

எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்

author img

By

Published : Jun 23, 2020, 4:29 PM IST

எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்
எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்

திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து எருமை மாட்டிடம் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு ஆறு மாத காலத்திற்கான தவணைத் தொகையை செலுத்த விலக்கு அளித்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசின் அறிவிப்பை கருத்தில் கொள்ளாமல், அக்குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு, வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்து வந்தனர்.

எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்
எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்

மேலும், அவ்வாறு செல்லும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ்த்தரமான வார்த்தைகளால் மிரட்டியும் வந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து 20 முறைக்கு மேல் மனு அளித்தனர்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் பயன் கிடைக்காததை உணர்த்தும் விதமாக, எருமை மாட்டிற்கு மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : வணிக நேரங்களை குறைப்பதாக வணிகர் சங்கம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.