திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக திருப்பூர்அந்தியூரைச் சேர்ந்த சேக் தாவூத் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் சுயேட்சை வேட்பாளர் சேக் தாவூத் 15 அம்ச கோரிக்கைகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
- குடும்பத் தலைவிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருதல்.
- மருந்துக்காக சாப்பிடும் பிராந்தியை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குதல்
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.
- ஏழை இளம்பெண்களுக்கு 10 பவுன் நகை, 10 லட்சம் ரொக்கத்தை வழங்கி இலவசமாக திருமணம் நடத்திவைத்தல்.
- கக்கனைப் போல நேர்மையாக இருப்பேன்.
- மேட்டூரிலிருந்து அந்தியூர் வழியாக திருப்பூருக்கு வாய்க்காலை வெட்டி குடிநீர் வழங்கல் உள்ளிட்டவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக வைத்து வாக்காளர்களை திக்குமுக்காடச் செய்கிறார்.
இவர் அளித்த தேர்தல் அறிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.