ETV Bharat / city

திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் பைக் விபத்தில் மணமகன் மரணம்!

author img

By

Published : Sep 9, 2022, 4:06 PM IST

தூத்துக்குடியில் இன்று(செப்.09) திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக் விபத்தில் மணமகன் மரணம்
பைக் விபத்தில் மணமகன் மரணம்

தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச்சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரின் மகன் ஜெகதீஷ்(27). இவர் உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேற்று(செப்.08) இரவு திருமண நிச்சயதார்த்த விழா நடந்த நிலையில், இன்று(செப்.09) காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜெகதீஷ், தனது பைக்கில் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் பைக் விபத்தில் மணமகன் மரணம்!

இதையும் படிங்க: கொல்கத்தா ஜோடி சென்னையில் சடலமாக மீட்பு.. - காதல் பிரச்சனை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.