ETV Bharat / city

திமுகவின் மனுக்கள் தள்ளுபடியில் சதி - அமைச்சர் குமுறல்

author img

By

Published : Feb 6, 2022, 9:06 AM IST

Updated : Feb 6, 2022, 9:40 AM IST

கடம்பூர் பேரூராட்சியில் மூன்று திமுக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சதி என அமைச்சர் கீதாஜீவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நடைபெற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று (பிப். 6) நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 36ஆவது வார்டில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும், அதற்கு அனைவரும் நாம் ஒற்றுமையோடு இருந்து மு.க. ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் கூட்டத்தில் பேசினார்.

'முதலமைச்சருக்கு தோள் கொடுப்போம்'

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் மட்டும்தான் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை அரசு அறிவித்துள்ளது.

அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழர்களுக்கு அரசு வேலை உறுதி செய்தது போல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பையும் உருவாக்கி தந்துள்ளார். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முதலமைச்சர் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

குடும்பச் சதி

தமிழ்நாடு வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் முதலமைச்சருக்கு ஆதரவு தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனை வாக்காக மாற்றிட திமுக தொண்டர்கள் பணி செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

கடம்பூர் பேரூராட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாத நிலை இருந்தது. அதனை திமுக கூட்டணி கட்சிகள் முறியடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தச் சூழ்நிலையில், ஒரு குடும்பத்தின் சதி காரணமாக மூன்று வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நீட் விவகாரம்: கட்சித் தலைவர்களின் காரசார கருத்துகள்

Last Updated : Feb 6, 2022, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.