ETV Bharat / city

"ஒரு குப்பையும் இல்ல"... கடற்கரையை சுத்தம் செய்ய சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

author img

By

Published : Sep 17, 2022, 7:48 PM IST

Updated : Sep 18, 2022, 3:02 PM IST

Etv Bharat
Etv Bharat

உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்த கூட்டி செல்லப்பட்ட மாணவர்கள் அங்கு குப்பைகள் இல்லாததால் செல்ஃபி எடுத்தும் கடற்கரையில் விளையாடியும் பொழுதை கழித்து சென்றனர்.

தூத்துக்குடி: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தமிழக கடற்கரை பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்த கடலோர காவல் படையினருடன் அந்த மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரி, ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 100-க்கும் மேற்பட்டோர் அழைத்துசெல்லப்பட்டனர்.

ஆனால், முத்து நகர் கடற்கரையில் எந்தவித பிளாஸ்டி குப்பைகள், அசுத்தங்கள இன்றி சுத்தமாக இருந்தது. செல்பி எடுத்தும் கடற்கரையில் விளையாடியும் பொழுதை கழித்தனர். அதோடு குப்பைகள் இருக்கும் சுத்தம் செய்யப்பட வேண்டிய கடற்கரை எங்களை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஏதோ கடமைக்காக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது.

குப்பையே இல்லாத முத்து நகர் கடற்கரையை சுத்தம் செய்ய சொல்வதாக அதிருப்தி

குப்பைகள் இல்லாத கடற்கரைக்கு மாணவர்களை அழைத்து வந்திருப்பது அதிருப்தி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.115.49 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி மேம்பாலம்... ஸ்டாலின் திறைந்து வைப்பு...

Last Updated :Sep 18, 2022, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.