ETV Bharat / city

நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற இருவர் கைது!

author img

By

Published : Aug 1, 2022, 9:34 PM IST

நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற இருவர் கைது
நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற இருவர் கைது

நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பரணர் தெருவை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் சாமுவேல், இவருக்கு சொந்தமான இடம் வி.எம். சத்திரம் இந்திரா நகரில் உள்ளது. மொத்தம் 5 சென்ட் கொண்ட இந்த நிலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளதாகும்.

இந்த இடத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர். இதனை அறிந்த சார் பதிவாளர் சண்முகசுந்தரம் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற குமரி மாவட்டம் காவு விளையை சேர்ந்த தங்கப்பன் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.40 லட்சம் கடனை அடைக்க முடியாமல் கொள்ளை நாடகம் - வடமாநில கில்லாடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.