ETV Bharat / city

இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மனு தள்ளுபடி!

author img

By

Published : Jun 30, 2022, 3:11 PM IST

Kasi
Kasi

இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை: சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச்சேர்ந்த 120-க்கும மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பண மோசடி செய்த வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

காசி, பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு, கந்துவட்டி வழக்கு எனப் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் காசியின் செல்போன் மற்றும் மடிக்கணினியில் இருந்த ஆபாசப் படங்கள் அழிக்கப்பட்டிருந்ததால் சைபர் க்ரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆபாசப் படங்களை அழித்ததாக தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கபாண்டியனை கைது செய்தனர். சிறையில் உள்ள தங்கபாண்டியன் ஜாமீன் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத்தெரிவித்து சிபிசிஐடி போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கழிவறைக்கு சென்ற பெண்களை செல்போனில் படம்பிடித்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.