மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் தள்ளிப்போவது ஏன்? - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் விளக்கம்!

author img

By

Published : Aug 1, 2022, 5:28 PM IST

Updated : Aug 1, 2022, 6:11 PM IST

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் விளக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், சுதந்திர தினம் ஆகியவற்றால் மதுரையில் நடைபெற இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப்போகிறது என்றும்; இம்மாதத்தின் 3 அல்லது 4ஆவது வாரத்தில் நடைபெறும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை: மதுரை அருகே மூன்று மாவடியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று (ஆக். 1) திறந்து வைத்தார்.

இதனையடுத்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "மதுரையில் 48ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இம்மாதத்தின் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் நடைபெறும்.

நாடாளுமன்ற கூட்டம், சுதந்திர தினம் ஆகியவற்றால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப்போகிறது. அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக்கொண்டோம். மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடைத்திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சி காலத்திற்குள் மதுரையில் குடிநீர், பாதாளச்சாக்கடை போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் ரூ. 1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

Last Updated :Aug 1, 2022, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.