ETV Bharat / city

ஜெயலலிதாவுக்குப் பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்!

author img

By

Published : Jan 17, 2020, 5:13 PM IST

ஜெயலலிதாவுக்கு பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்
ஜெயலலிதாவுக்கு பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்துள்ள தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஓய்வெடுக்க தனி கேரவன் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டுகளித்துவருகின்றனர்.

இதற்கிடையே தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது குடும்பத்தாருடன் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசித்துவருகிறார். அவருக்காக மேடையின் பின்புறம் ஒரு கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஓபிஆர் ஓய்வெடுக்க கேரவன்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆளும் கட்சியின் அடுத்த அதிரடி

அவ்வப்போது அதில் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையைக் குறைக்கவும் தனது குடும்பத்தாரின் வசதியை கருதியும் இந்த கேரவன் ரவீந்திரநாத் குமாரின் குடும்பத்திற்காக தனிப்பட்ட முறையில் மேடைக்குப் பின்புறமாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு தனி ஒரு நபருக்காக கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:

ஜல்லிக்கட்டு: காளையை அழைத்துவந்த இளைஞர் உயிரிழந்த சோகம்

Intro:ஜெயலலிதாவுக்கு பிறகு தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கேரவன் வைத்துக்கொண்ட ஓ பி ரவீந்திரநாத் குமார்

ஓ பி ஆர் எம் பி ஓய்வெடுக்க கேரவன் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆளும் கட்சியின் அடுத்த அதிரடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்துள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் குமார் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையை கழிக்கவும் மேடைக்கு பின்புறம் கேரவன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:ஜெயலலிதாவுக்கு பிறகு தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கேரவன் வைத்துக்கொண்ட ஓ பி ரவீந்திரநாத் குமார்

ஓ பி ஆர் எம் பி ஓய்வெடுக்க கேரவன் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆளும் கட்சியின் அடுத்த அதிரடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்துள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் குமார் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையை கழிக்கவும் மேடைக்கு பின்புறம் கேரவன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மேடைக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர்.

இதற்கிடையே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது குடும்பத்தாருடன் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசித்து வருகிறார். அவருக்காக மேடையின் பின்புறம் ஒரு கேரவன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது அதில் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையைக் குறைக்கவும் தனது குடும்பத்தாரின் வசதியை கருதியும் இந்த கேரவன் போபி ரவீந்திரநாத் குமாரின் குடும்பத்திற்காக தனிப்பட்ட முறையில் மேடைக்குப் பின் புறமாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு தனி ஒரு நபருக்காக கேரவன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.