ETV Bharat / city

வேலையின்மையால் எம்.இ., படித்த இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

author img

By

Published : Oct 4, 2021, 11:03 PM IST

இளைஞர்
இளைஞர்

மதுரையில் வேலையில்லாத காரணத்தால் எம்.இ., படித்த பொறியியல் பட்டதாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம், ஆண்டாள்புரம் பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், இளைஞர் கிருஷ்ணமூர்த்தி. இவர், இன்று (அக்.04) அவரது வீட்டின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி எம்.இ., பட்டதாரி எனவும் உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.