ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

author img

By

Published : Nov 10, 2020, 4:48 PM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

case
case

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஒன்பது காவலர்களும் பிணை கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அங்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ” இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும், மதுரை நீதிமன்றத்தில் சிலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், வழக்கை சிபிஐ விசாரித்து செய்வதால் எங்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் ” என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பாரதிதாசன் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. விசாரணையின் முடிவில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ” இவ்வழக்கு குறித்த சிபிஐ குற்றப்பத்திரிகை மதுரை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பிணை மனு மற்றும் விசாரணை வழக்குகள் என அனைத்தும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலேயே நடைபெறும். இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே, விசாரணையும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் ” என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ. 268.58 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.