தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தினால் கள் இறக்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்"எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது தொடர்பாக தமிழ்நாட்டின் உள் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை