ETV Bharat / city

2021-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை மனு!

author img

By

Published : Dec 12, 2020, 6:38 AM IST

jallikattu
jallikattu

மதுரை: அலங்காநல்லூரில் 2021ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த வித தடையுமின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இதே போல் தற்போது தமிழ்நாட்டில் கரோனா 144 தடை உத்தரவு உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி தடைபடாமல் வழக்கம் போல் வருகிற 2021ஆம் ஆண்டிலும் போட்டி நடைபெற வேண்டும், அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், அரசு கூறும் வழிகாட்டுதல்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியான முறையில் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் வாடிப்பட்டி துணை வட்டாட்சியர் வனிதாவிடம் மனு அளித்து சென்றனர்.

மேலும், ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து விழா நடத்துவது குறித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக விழா கமிட்டியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணி நியமனம்' - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.